இன்று 'கோட்' படப்பிடிப்பின் கடைசி நாள்.. நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த நடிகர்..


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் இருப்பினும் மற்ற நட்சத்திரங்களில் படப்பிடிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஒரு பக்கம் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்று இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மேற்பார்வை பார்த்ததாகவும் அதன் பின்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘கோட்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து ‘கோட்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அஜ்மல் தனது சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான ஒரு பதிவை செய்துள்ளார்.
அந்த பதிவில் ’இன்றுடன் எனது கேரக்டர் படப்பிடிப்பு முடிந்தது, ‘கோட்’ படத்தில் பணி புரிந்தது ஒரு அற்புதமான பயணம், இந்த கேரக்டரை முடித்துவிட்டு படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெறும் போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது, அடுத்து இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்றும் பதிவு செய்துள்ளார். அஜ்மலின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com