close
Choose your channels

'துணிவு' படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதா? அப்போ 'வாரிசு' நிலைமை?

Tuesday, November 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் சுமார் 1100 திரையரங்குகளில் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 800 திரையரங்குகளில் ’துணிவு’ படத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் 'வாரிசு’ படத்தின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த 'வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரண்டு படங்களையும் பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை அடுத்து திரையரங்குகளை புக் செய்யும் பணிகளை அந்நிறுவனம் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் விஜய்யின் ’வாரிசு’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் அந்நிறுவனமும் தியேட்டர்களை புக்கிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ படத்துக்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் சுமார் 1,100 திரையரங்குகள் மட்டுமே இருக்கும் நிலையில் 800 திரையரங்குகளில் ’துணிவு’ படத்துக்கு ஒதுக்கப்பட்டு விட்டால் ’வாரிசு’ படத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியபோது ’பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ உள்ளிட்ட படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித்தின் ’துணிவு’ படத்துக்கு 800 திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.